Sunday 10 April 2016

மேயர் என்.சிவராஜ் உருவாக்கிய மக்கள் விளையாட்டரங்கம், நேரு விளையாட்டரங்கமாக மாறின கதை


முதல்வர் ஜெயலலிதாவின் ஆணவ சான்று...

கௌதம சன்னா
 
பேராசிரியர் என் சிவராஜ்
புரட்சியாளர் அம்பேத்கருக்குப் பிறகு அகில இந்திய அளவில் தலித் மக்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் அவர்கள். அவர் பல்வேறு பதவிகளை வகித்தவர். வழக்கறிஞர். சென்னை சட்டக்கல்லூரியின் பேராசிரியர், அகில இந்திய அட்டவணைச் சாதிகள் கூட்டமைப்பின் தலைவர். அம்பேத்கர் உருவாக்க முயன்ற இந்திய குடியரசு கட்சியை உருவாக்கி இந்தியா முழுமைக்கு வளர்த்தவர். சென்னையில் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளுள் ஒருவர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தந்தை சிவராஜ் அவர்கள் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் பின்பு மேயராகவும் பதவி வகித்தவர்.