Sunday 6 March 2016

மாவீரர்.ஆரிய சங்காரன் படுகொலை..?


முன்னும் பின்னும்.
கௌதம சன்னா

மாவீரர்.ஆரிய சங்காரன் மறைவதற்கு முன்..அகில இந்திய கட்சியான குடியரசு கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து 1962ல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அகில இந்திய தலைவர் தந்தை சிவராஜ் அவர்கள் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவு வந்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், நாடாளுமன்ற வேட்பாளர் தந்தை சிவராச் தோல்வியடைந்தார். ஆனால் அந்த தொகுதிக்கு உள்பட்ட ஆறு சட்ட மன்ற தொகுதிகள் அனைத்திலும் திமுக வென்றது. இது அப்பட்டமான துரோகம் என்பது அனைவருக்கும் தெரிந்து போனது. கூட்டணித் தலைவரையே தோற்கடித்த பெருமை திமுகவையே சாரும். அதனால் ஆரிய சங்காரன் கொதித்து போயிருந்தார்.
அதே நேரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வரும் எதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். அவரது அறிக்கைகள் துண்டு பிரசுரங்கள் படிக்கும் போது ரத்தம் சூடேற்றும் வகையில் இருந்தன.
சங்காரன் மறைந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற எம்சியார் அவர்கள் சங்காரனின் மரணத்தைப் பற்றின சந்தேகத்தை எழுப்பினார். அதை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
அவர் நடத்திய ஆரிய சங்காரன் என்ற பத்திரிக்கையின் முகப்பை இங்கே இருக்கிறது, அதில் "தீவிர இதழ்" என்று அறிவித்து நடத்தினார். அந்த துணிச்சல் அசாத்தியமானது.
தலித் அமைப்புகளுடன் கூட்டமைத்து அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு துண்டறிக்கைகள் இங்கே உள்ளன..
தலித் மக்களின் வரலாற்றை சிதைத்த துரோகப் பக்கங்களை இனி நீங்கள் தொடர்ந்து காணலாம்.. ஆதாரங்களுடன் வெளிவரும்..பரப்புவது உங்கள் வேலை..
உங்கள் லைக் -கினால் எந்த பயனும் இல்லை, அதை நான் விரும்பவும் இல்லை.பரப்ப ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடருங்கள்

No comments:

Post a Comment